என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanuman slokas"

    இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
    ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக
    ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே
    ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார்
    ஊரில்அஞ்சிலே ஒன்று வைத்தான்
    வன் நம்மை அளித்துக் காப்பான்

    வானர தலைவன் வீர கேசரி அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமனின் புகழ் பாடும் துதி இது. இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. செவ்வாய், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அனுமன் சந்நிதியில் அனுமனுக்கு தீபம் ஏற்றி இந்த துதியினை படித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். தைரியம், மனஉறுதி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார் அனுமன்.

    அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆபத்து நேரும் போது சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஆபத்திலிருந்து அனுமன் நிச்சயம் நம்மை காப்பார்.
    ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே
    அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே
    ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ
    தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!    

    - ஹனுமத் ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.
    அனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
    அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே
    மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
    ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்
    ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:
    ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்
    ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்
    ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

    பொதுப்பொருள்:

    அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.

    இத்துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் தரும்.
    அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி அனுமனை வழிபாடு செய்து வந்தால் எந்த விதமான ஆபத்துகளும் நம்மை நெருங்காது.
    ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே
    அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே
    ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ
    தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!    

    - ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.
    ×