என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஓவியாவ விட்டா யாரு
Byமாலை மலர்4 Sep 2017 11:28 AM GMT (Updated: 4 Sep 2017 11:28 AM GMT)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சினேகன் என அனைவரும் ஒரே படத்தில் இணைந்த படமான ‘ஓவியாவ விட்டா யாரு’ படத்தின் முன்னோட்டம்.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இது தற்போது ‘ஓவியாவ விட்டா யாரு’ என்ற பெயரில் திரைக்கு வருகிறது.
புதுமுகம் சஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். ஓவியா நாயகியாக நடித்துள்ள இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பவர்ஸ்டார், ராதாரவி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - சினேகன், ஒளிப்பதிவு - நாகராஜ், தயாரிப்பு - மதுரை செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜதுரை.
படம் பற்றி தயாரிப்பாளர் மதுரை செல்வம் கூறுகிறார்...
“ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு மதுரை வரும் புதுமுக ஹீரோ சஞ்சீவி, மோசடி பேர்வழி பவர் ஸ்டாரிடம் ஏமாந்து போகிறார். தனது புத்திசாலி தனத்தை பயன்படுத்தி இழந்ததை எப்படி மீட்கிறார் என்பது கதை.
ஓவியா 28 நாட்கள் நடித்துக் கொடுத்தார். முதலில் புதுமுக ஹீரோ என யோசித்தவர், கதையை கேட்டு ‘ஓகே’ சொல்லி விட்டார். எம்.ஜி.ஆரால். பெயர் சூட்டப்பட்ட சீதா என்ற யானை முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. யானைப்பாகனாக செந்தில் வருகிறார்.
ஒரு பிரபல ரிப்போட்டராக ஓவியா நடிக்கிறார். கூத்து ஆடுபவராக கஞ்சா கருப்பும், ராதாரவியின் உதவியாளராக வையாபுரியும் வருகிறார்கள். சினேகன் பாடல் எழுதியிருக்கிறார். பிக்பாசில் பங்கேற்ற நான்கு பேரும் எங்கள் படத்தில் முன்னமே நடித்தது சிறப்பு” என்றார்.
புதுமுகம் சஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். ஓவியா நாயகியாக நடித்துள்ள இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பவர்ஸ்டார், ராதாரவி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - சினேகன், ஒளிப்பதிவு - நாகராஜ், தயாரிப்பு - மதுரை செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜதுரை.
படம் பற்றி தயாரிப்பாளர் மதுரை செல்வம் கூறுகிறார்...
“ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு மதுரை வரும் புதுமுக ஹீரோ சஞ்சீவி, மோசடி பேர்வழி பவர் ஸ்டாரிடம் ஏமாந்து போகிறார். தனது புத்திசாலி தனத்தை பயன்படுத்தி இழந்ததை எப்படி மீட்கிறார் என்பது கதை.
ஓவியா 28 நாட்கள் நடித்துக் கொடுத்தார். முதலில் புதுமுக ஹீரோ என யோசித்தவர், கதையை கேட்டு ‘ஓகே’ சொல்லி விட்டார். எம்.ஜி.ஆரால். பெயர் சூட்டப்பட்ட சீதா என்ற யானை முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. யானைப்பாகனாக செந்தில் வருகிறார்.
ஒரு பிரபல ரிப்போட்டராக ஓவியா நடிக்கிறார். கூத்து ஆடுபவராக கஞ்சா கருப்பும், ராதாரவியின் உதவியாளராக வையாபுரியும் வருகிறார்கள். சினேகன் பாடல் எழுதியிருக்கிறார். பிக்பாசில் பங்கேற்ற நான்கு பேரும் எங்கள் படத்தில் முன்னமே நடித்தது சிறப்பு” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X