என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
5 கோடி பார்வையாளர்கள் பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் - சிவகார்த்திகேயன் பெருமிதம்
Byமாலை மலர்19 Oct 2018 4:49 AM GMT (Updated: 19 Oct 2018 4:49 AM GMT)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். #Kanaa #AishwaryaRajesh
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் `கனா'.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடிய `வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.
என் ஒவ்வொரு விடியலையும் வண்ணமாக மாற்றிய தேவதைகள் #ஆராதனா@Siva_Kartikeyan@gkblyrics#vaikomvijayalakshmi@dhibuofficial மற்றும் இப்படைப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள் #kanaa#DreamBig#50MViewsForVaayadiLyricalVideo
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) October 17, 2018
► https://t.co/D1gvs53RH8pic.twitter.com/CiedaHAudX
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது,
" தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த அருண்ராஜாவுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என்றார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X