search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
    X

    விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

    சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடித்த வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி என்னுடைய நண்பர். அவரது ஆரம்ப காலத்தில் இருந்து அவருடன் பழகி வருகிறேன். அவருடைய வளர்ச்சியை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அவருடைய வளர்ச்சி அவரையே சார்ந்தது. சினிமாவில் நிறைய அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவாக இருக்கிறார். நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். திறமையானவர். ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 

    விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் உருவாக்க திட்டமிட்டோம். வரிசையாக அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் நான் தொந்தரவு செய்யவில்லை. நல்ல உயரத்திற்கு விஜய் சேதுபதி சென்று கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன்’ என்றார்.

    எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×