search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகைகளைப் பற்றி வரம்பு மீறி பேசுகிறார்கள் - ரகுல் பிரீத்தி சிங் ஆவேசம்
    X

    நடிகைகளைப் பற்றி வரம்பு மீறி பேசுகிறார்கள் - ரகுல் பிரீத்தி சிங் ஆவேசம்

    தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகைகளைப் பற்றி வரம்பு மீறி பேசுவது கண்டத்திற்குரியது என்று நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கோபப்பட்டுள்ளார். #RakulPreetSingh
    தெலுங்கு டி.வி. ஒன்றுக்கு நடிகர் பொசானி முரளி கிருஷ்ணா பேட்டி அளித்தார். அப்போது நடிகை ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து கேள்வி கேட்ட தொகுப்பாளர், ‘சினிமாவில் விலை மாதுகளும், புரோக்கர்களும் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

    நடிகைகளை விலை மாது என்று குறிப்பிடும் வகையில் அவர் கேட்டகேள்வி, தெலுங்கு படகுழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு தெலுங்கு பட உலகம் சார்பில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த டி.வி. சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

    டி.வி.தொகுப்பாளரின் கேள்வியை கேட்டு ஆவேசப்பட்ட ரகுல் பிரீத்திசிங், “தற்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் ‘டிஆர்பி’ ரேட்டை உயர்த்த எதுவும் செய்கிறார்கள். இந்த பேட்டி எடுத்தவர் வரம்பு மீறி பேசி இருக்கிறார்கள். என் பெற்றோருக்கு தெலுங்கு தெரியாது. தெரிந்து இருந்தால், இப்படித்தான் திரை உலகினர் இருக்கிறார்களா? என்று நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.



    நடிகை லட்சுமி மஞ்சு, “எங்களை வைத்து பணம் சம்பாதிக்க மீடியாக்கள் நினைக்கின்றன. தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த கேள்வியை கேட்டவரை சும்மா விடக்கூடாது” என்று ஆவேசப்பட்டுள்ளார். #RakulPreetSingh

    Next Story
    ×