search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ ரெட்டி"

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #PollachiRapist #SriReddy
    பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.



    விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

    அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டிக்கு, தற்போது முன் பணம் கொடுத்து அடுத்த படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். #SriReddy
    தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

    தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். இதில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எனக்கு பட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். நான் லாரன்சை நேரில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். அவருடன் குழந்தைகளும் இருந்தார்கள். அவர்கள் எனக்காக பிராத்தனை செய்தார்கள். அதன்பின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி முன் பணம் கொடுத்தார் லாரன்ஸ். இந்த பணத்தை சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுலம் பகுதி மக்களுக்கு கொடுக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். 
    தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #SriReddy
    தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

    தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார்.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் “மீ டூ” என்ற ஹேஸ்டேக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் தான் ஸ்ரீரெட்டியும் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

    மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்தார். நாங்கள்தான் அரசாங்கம். நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும் எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர் என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில் வெளியிட இருக்கிறேன்.

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

    ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டை டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது “ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்ததோ அல்லது பேசியதோ கிடையாது. சரியான நேரத்தில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்குவேன். தற்போது இதற்கு மேல் எதுவும் கூற இயலாது” என்றார்.
    தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த ஸ்ரீரெட்டி, தற்போது இயக்குனர் ஒரு மீது பாலியல் புகார் வைத்துள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.

    தனது முகநூல் பக்கத்தில் அவர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த புகாரில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.

    இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆந்திராவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 

    சில நாட்கள் பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது சாடியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு ‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார். 



    தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதான ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சினிமா உலகில் பாலியல் புகார்களை கூறி வரும் ஸ்ரீ ரெட்டி, அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அறிந்த செய்திக்கு ஆவேசமாக பேசியிருக்கிறார். #SriReddy
    நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 

    அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். 
    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார். 

    செக்ஸ் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பினார். அதற்கு ஸ்ரீரெட்டி, ‘‘பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
    சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்து அவர்கள் மூலம் பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சி செய்கிறார் என்று வாராகி குற்றம் சாட்டியுள்ளார். #SriReddy
    சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. 

    இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். 

    இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,

    "சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார். 

    கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார். 

    ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. 

    தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீ ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.



    ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்த சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

    அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு  வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும். 

    நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும். அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள். 

    இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும். எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்" 

    என வாராகி இவ்வாறு கூறியுள்ளார்.
    தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். #SriReddy #ReddyDairy
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

    இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க இருக்கிறார். தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.



    அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.
    பட அதிபர்கள், நடிகர்கள் மீது புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை பற்றி மிகவும் கெட்ட வார்த்தைகளால் விளாசியுள்ளார். #SriReddy #SriLeaks
    நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

    இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    பிருத்வி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது “காமெடி பிருத்வி... ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா?” என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.



    இது ஆந்திர அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திரைத்துறையினரை பற்றி புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, நடிகைகளை அனுபவிக்கத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SriReddy #TamilLeaks
    தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி  குற்றஞ்சாட்டினார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி விளக்கியுள்ளார். 

    நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜென்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார்.

    உனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான், நடிகைகளை திரைப்படத்துறையினர் படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.

    ஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் சாதுர்யம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.



    ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

    தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஐதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார். #TRajendar #SriReddy
    நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது.

    தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் சிலர் மீதும் புகார் கூறி உள்ளார். தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும்  ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.



    இது குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் கூறும்போது, ‘தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும்’ என்றார்.
    தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ஆகியோரை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.

    கடந்த வாரம் ஒரு பேட்டியில், ’தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் இயக்குனர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்தது’.

    பின்னர் சில நாட்களில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் ஸ்ரீரெட்டி அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை என்றார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 



    அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். அதில், 5 வருடங்களுக்கு முன்னர், ஐதராபாத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவின் பார்டி நடைபெற்ற பார்க் ஹோட்டல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் என்றும், கிளப்பில் இருவரும் சேர்ந்து நடனமாடிய போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியது நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

    தற்போது ராகவா லாரன்ஸ் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறா. அதில், ஐதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்சை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அவரது அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியந்தேன்.

    ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.



    ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். 

    அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை" என பதிவு செய்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Lawrance
    திரைத்துறையினர் மீது பாலியல் புகார் கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சங்க உறுப்பினர் கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தார். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

    ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் நடிக்க, தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

    இந்த நிலையில், நடிகர் நானி மீதும், ஸ்ரீரெட்டி ‘செக்ஸ்’ புகார் கூறினார். “நானி பெரிய கதாநாயகன் ஆவதற்கு முன்பே எனக்கு தெரியும். அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நான் பெரிய படத்தில் நடிக்கும்போது, உனக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றார். உடல் ரீதியாக என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். இப்படி ஆசை காட்டி, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நானி கெடுத்து விட்டார் என்றும் கூறினார்.

    இதனால் ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. “ஸ்ரீரெட்டி புகாரில் உண்மை இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்.

    இதுவரை அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல், தெலுங்கு நடிகர் சங்கம் நிறுத்தி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #SriReddy
    ×