என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்யுடன் நடிக்க 3 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
Byமாலை மலர்2 Nov 2017 9:00 AM GMT (Updated: 2 Nov 2017 9:00 AM GMT)
`மெர்சல்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே நல்ல வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் `மெர்சல்'.
அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒளிப்பதிவாளராக கிரீஸ் கங்காதரனும், இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, தோனி படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக, சாக்ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கின்றன. அதேநேரத்தில் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் திரைக்கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒளிப்பதிவாளராக கிரீஸ் கங்காதரனும், இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, தோனி படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக, சாக்ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கின்றன. அதேநேரத்தில் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் திரைக்கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X