என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது.
- இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார்.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியீடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் 23-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
- ஜன நாயகன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது
- ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரே பேரே வரலாறு பாடல் தற்போது வெளியாகியுள்ளது
- ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது.
- போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றி
கரூர் சம்பவத்திற்கு பிறகு, பொதுவெளியில் இன்று ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி முடித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி மக்களுக்கு முகத்தை பரிட்சயப்படுத்தினார். மேலும் வழக்கம்போல திமுகவை சாடி, பெயர் குறிப்பிடாமல் அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரம் சுமூகமாக முடிந்தநிலையில் தனது கட்சி பொறுப்பாளர் செங்கோட்டையனுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும், ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த்-க்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் M.பாலாஜி http://B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும், கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
- செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார்.
- அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
- எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.
ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.
விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.
விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.
- களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று விஜய் தெரிவித்தார்.
- அண்மைய காலமாக விஜயை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார்" என்று புகழ்ந்து பேசினார்.
மேலும் பேசிய விஜய், "எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்.
காலத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் மற்றும் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியது சீமானை விமர்சிக்கும் வையில் உள்ளது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று அவர் பேசியிருந்தார்.
பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியதற்கு எதிர்வினையாக தான் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
- திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
- தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
- எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-
எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.
இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..
என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.
தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.
என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை.
- இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.
ஈரோடு:
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போது விஜய் பேசியதாவது:-
உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை. எனக்கு, என்மேல எல்லையில்லா பாசம் வெச்சுருக்கிற இந்த Mass- தான் துணை.
சலுகைகளை இலவசம் என்பதில் உடன்பாடு இல்லை. ஓசியில் போவதாகக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர். கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா? இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை என்றார்.
இதனிடையே, பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்பீக்கர் கம்பம் மீது ஏறிய தொண்டரை தம்பி கீழ இறங்குப்பா... ப்ளீஸ்... நீ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன் என்று அறிவுரை கூறினார்.
- மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
- மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளன.
* ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பிரச்சனையை எடுத்து பேசி வருகிறேன். இது அரசியல் கிடையாதா?
* மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது அரசியல் இல்லையா? இல்லை உங்களைப்போல அநாகரிகமாக பேச வேண்டுமா?
* நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை, மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் இல்லை.
* மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
* ஓசி ஓசி என்று மக்களை அசிங்கப்படுத்தினால் அதனை தட்டிக்கேட்க நான் வருவேன்.
* மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
* சொன்னா மட்டும் போதுமா? என கேட்கிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுட நாங்கள் என்ன தி.மு.க. வா...
* தி.மு.க. ஆட்சியில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது யார் ஆட்சியில்?
* தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு உள்ளதா? அப்படி என்றால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
- பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.
* வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும்.
* ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
* பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி.
* எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி.
* தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
* த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?
* எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?
* அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
* 24 மணி நேரமும் தி.மு.க.வினரின் நோக்கம் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
* ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான்.
* நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல்.
* ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.
* மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக வேலை நடக்கிறது.
* தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
* பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
* நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள் என்றார்.
- இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும்.
- மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* மஞ்சள்... மஞ்சள்... பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.
* நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க.
* நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
* இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது.
* அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண்.
* இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.
* காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.
* பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.
* இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று பேசினார்.






