என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அடுத்த தேர்தலில் நிற்பேன் : விஷால் அதிரடி
Byமாலை மலர்8 Oct 2017 12:48 PM GMT (Updated: 8 Oct 2017 12:48 PM GMT)
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துக் கொண்ட செயலாளர் விஷால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் கண்டிப்பாக நிற்பேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் பொழுக்குழு இன்று கூடியது. இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதில் விஷால் பேசும்போது, ‘நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். வாக்குறுதியிலும், விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது.
நடிகர் சங்க கட்டடம் கட்ட நிறைய தடங்கல் வந்தது. முதலில் புயல், பின்னர் முதல்வர் ஜெயலலிதா மறைவு. வழக்கு என தொடர்ந்து சோதனைகள் வந்தது. இருந்தாலும், கட்டடம் கட்டி முடித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறோம். அடுத்த வருடம் இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும்.
அடுத்த நடிகர் சங்க தேர்தலிலும் நாங்கள் நிற்க இருக்கிறோம். ஏனென்றால், சங்க கட்டிடத்தை பாதியில் விட்டு செல்ல மாட்டோம். கட்டிடத்தை முடித்த பின்பு, அதன்பின் வரும் தேர்தலில், இளைஞர்களுக்கு வழிவிடுவோம்.
கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது. 40 சதவிகிதம் வரி செலுத்திவிட்டு தொழில் நடத்த முடியாது. கேளிக்கை வரியை ரத்து செய்ய அரசு தரப்பில் இருந்து கருணாஸ் முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்.
இதில் விஷால் பேசும்போது, ‘நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். வாக்குறுதியிலும், விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது.
நடிகர் சங்க கட்டடம் கட்ட நிறைய தடங்கல் வந்தது. முதலில் புயல், பின்னர் முதல்வர் ஜெயலலிதா மறைவு. வழக்கு என தொடர்ந்து சோதனைகள் வந்தது. இருந்தாலும், கட்டடம் கட்டி முடித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறோம். அடுத்த வருடம் இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும்.
அடுத்த நடிகர் சங்க தேர்தலிலும் நாங்கள் நிற்க இருக்கிறோம். ஏனென்றால், சங்க கட்டிடத்தை பாதியில் விட்டு செல்ல மாட்டோம். கட்டிடத்தை முடித்த பின்பு, அதன்பின் வரும் தேர்தலில், இளைஞர்களுக்கு வழிவிடுவோம்.
கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது. 40 சதவிகிதம் வரி செலுத்திவிட்டு தொழில் நடத்த முடியாது. கேளிக்கை வரியை ரத்து செய்ய அரசு தரப்பில் இருந்து கருணாஸ் முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X