search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ - மெர்சல் விழாவில் பார்த்திபன் கொளுத்திய வெடி
    X

    ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ - மெர்சல் விழாவில் பார்த்திபன் கொளுத்திய வெடி

    விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.
    விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

    விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் ஒன்னு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்.” என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் (கொஞ்சம் இடைவெளிவிட்டு) “சி.எம்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.



    மேலும், சமீபத்தில் விஜய் ரசிகர்களால் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட போது, விஜய் நடந்து கொண்டவிதம் பாராட்டத்தக்கது எனவும் பார்த்திபன் பேசினார்.

    ஏற்கனவே, விஜய் அரசியலில் களமிறங்குவார் என ஸ்கூப் நியூஸ்கள் ரெக்கை கட்டி பறந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பார்த்திபனின் இந்த பேச்சு, அரசியல் மற்றும் சினிமா அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×