என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அரசியல் பேச்சுகளுக்கு மத்தியில் அதிரடி அரசியல் படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்
Byமாலை மலர்27 July 2017 5:45 AM GMT (Updated: 27 July 2017 5:45 AM GMT)
தற்போதைய அரசியல் பேச்சுகளுக்கு மத்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் அதிரடி அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக `தூங்காவனம்' என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பின்னர் `மீன்குழம்பும் மண்பானையும்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கமல் தற்போது `சபாஷ்நாயுடு', `விஸ்வரூபம்-2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார்.
`சபாஷ் நாயுடு', `விஸ்வரூபம்-2' படங்கள் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார். அதன்படி கமல் அடுத்ததாக `தலைவன் இருக்கிறான்' என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அரசியல் சாயலில் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
இதுகுறித்து கமல் கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நான் படத்தில் நடிக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த படத்தில் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். அதற்கான தலைப்பையும் முன்பே பதிவு செய்துவிட்டேன். எனவே இது தற்போதைய முடிவு கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
`சபாஷ் நாயுடு', `விஸ்வரூபம்-2' படங்கள் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார். அதன்படி கமல் அடுத்ததாக `தலைவன் இருக்கிறான்' என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அரசியல் சாயலில் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
இதுகுறித்து கமல் கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நான் படத்தில் நடிக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த படத்தில் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். அதற்கான தலைப்பையும் முன்பே பதிவு செய்துவிட்டேன். எனவே இது தற்போதைய முடிவு கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X