என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘சுவாதி கொலை வழக்கு’ : இயக்குனர், தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் மறுப்பு
Byமாலை மலர்12 July 2017 6:39 AM GMT (Updated: 12 July 2017 6:39 AM GMT)
‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தென்காசியை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தின் விளம்பர காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதுகுறித்து சுவாதியின் தந்தை சந்தானகோபாலன், கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ்செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி 3 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திலும் உண்மையானவர்களின் பெயரையே சூட்டியுள்ளார்கள். உண்மை கதை என்று விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், இதுபோல எப்படி படம் எடுக்க முடியும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தின் விளம்பர காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதுகுறித்து சுவாதியின் தந்தை சந்தானகோபாலன், கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ்செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி 3 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திலும் உண்மையானவர்களின் பெயரையே சூட்டியுள்ளார்கள். உண்மை கதை என்று விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், இதுபோல எப்படி படம் எடுக்க முடியும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X