என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அதிக எடைகொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு ஊரை சுற்றிவந்த உதயநிதி
Byமாலை மலர்9 Jun 2017 7:32 AM GMT (Updated: 9 Jun 2017 7:33 AM GMT)
‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்காக உதயநிதி அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு நடித்துள்ளார்.
உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இப்படத்தை தளபதி பிரபு என்பவர் இயக்கி வருகிறார். முதன்முறையாக இப்படத்தில் உதயநிதியுடன் சூரி கைகோர்த்திருக்கிறார். மேலும், பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் உதயநிதி முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை உதயநிதி தலையில் சுமந்துகொண்டு, காலில் செருப்பு அணியாமல் கிராமத்தை சுற்றி வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.
நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா, சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் இந்த காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் உதயநிதி முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை உதயநிதி தலையில் சுமந்துகொண்டு, காலில் செருப்பு அணியாமல் கிராமத்தை சுற்றி வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.
நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா, சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் இந்த காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X