என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    • iPhone 15 கேமரா 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் கொண்டுள்ளது.

    ப்ளிப்கார்ட்டின் மெகா ஜூன் பொனான்சா விற்பனையில் ஐபோன் 15 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சியின்போது ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது. இந்த ஐபோன் அறிமுகத்தின்போது, 128ஜிபி ஐபோன் 15 ரூ.79,900 ஆகவும், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வகைகளின் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 ஆகவும் இருந்தது.

    ஐபோன் 15 மெகா ஜூன் பொனான்சா விற்பனையானது ஸ்மார்ட்போனிற்கு கணிசமான தள்ளுபடிகளை வழங்குகிறது. விற்பனை இன்று (ஜூன் 19) முடிவடையும் நிலையில் ஐபோன் 15-ஐ குறைந்த விலையில் பெற ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

    பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 15 128ஜிபி வேரியண்ட் விலையில் 14 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.67,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    பிளிப்கார்டில் ஆக்ஸிஸ் வங்கி கார்டை பயன்படுத்தி பழைய ஸ்மார்ட்போன் வர்த்தகம் செய்வதால் மேலும் விலை குறையும். வர்த்தக மதிப்பு உங்கள் பழைய தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. அதன் நிலை சிறப்பாக இருந்தால், அதிக தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1000 கூடுதல் வங்கி சலுகை உள்ளது.

    ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14 மற்றும் முந்தைய மாடல்களின் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இருந்து பிரபலமான அம்சமான டைனமிக் ஐலேண்ட் நாட்ச் புதிய ஐபோன் 15 சீரிஸில் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் 15-இல் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 

    ஐபோன் 15 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் "நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை" வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. மேலும் அதன் பேட்டரி ஆயுள் ஆரம்பத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதை விட இரட்டிப்பாகும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

    ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் A16 பயோனிக் சிப் கொண்டிருக்கிறது, இது கடந்த ஆண்டு ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸில் பயன்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப்செட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ப்ரோ மாடல்கள் A16 பிராசஸர் கொண்டிருந்தன.

    ஐபோன் 15 இல் குறிப்பிடத்தக்க மாற்றமாக USB Type-C சார்ஜிங் அமைந்தது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கான லைட்னிங் போர்ட் சகாப்தத்தின் முடிவைக் குறித்தது. மேலும் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C தரநிலைக்கு மாறியுள்ளது.

    • ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
    • மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

    முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

     

    சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து  Non - consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.  

    மேலும் 967 கணக்குகள் நாட்டில் தீவிரவாதத்த்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
    • ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.

    இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.

    ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


    ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார். 

    • கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.
    • ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடு, WWDC நேற்றிரவு நடைபெற்றது. இதை துவக்கி வைத்து உரையாற்றிய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து பேசினார்.

    இத்துடன் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிராண்டிங்கில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், WWDC 2024 நிகழ்வில் ஆப்பிள் அறிவித்த புதிய சேவைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்:

    சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

     


    இத்துடன் மெசேஞ்சஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-இன் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஏ.ஐ. சேவையை சாதனத்தில் உள்ள சிப்செட் சார்ந்து வழங்கும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சார்ந்த சிரி:

    ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், சிரி சேவையில் ஏ.ஐ. வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிரி மொழிகளை முன்பை விட அதிக நேர்த்தியாத புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. கூடுதலாக சிரி சேவையை மற்ற ஆப்பிள் நிறுவன செயலிகளுடன் ஒருங்கிணைக்கவும் முடியும். இதனால் சிரியிடம் ஒரு புகைப்படத்தில் பிரைட்னசை அதிகப்படுத்த வாய்ஸ் கமாண்ட் கொடுத்தாலே போதுமானது.

     


    இன்-ஆப் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள்:

    போட்டோஸ் ஆப்-இன் மெமரிஸ் அம்சம் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏ.ஐ. மூலம் செயலியில் உள்ள சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக தேர்வு செய்யப்படுகிறது. மேலும், புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்குவதற்கு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இதே போன்ற வசதி கூகுள் பிக்சல் மற்றும் கேலக்ஸி ஏ.ஐ. உள்ளிட்டவைகளில் ஏற்கனே கிடைக்கிறது. இதுதவிர மெயில் ஆப், மெசேஜஸ் ஆப் உள்ளிட்டவைகளிலும் ஏ.ஐ. வசதி புகுத்தப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்களில் சாட்ஜிபிடி:

    தனது சாதனங்களில் ஏ.ஐ. வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சாட்ஜிபிடி சேவையை லாகின் செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த வசதி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சேவை ஆப்பிள் சிலிகான், நயூரல் எஞ்சின் உள்ளிட்டவைகளில் இயங்கும். இந்த ஏ.ஐ. அம்சங்கள் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபேட், M1 மற்றும் அதன்பின் வெளியான சிப்செட் கொண்ட மேக் சாதனங்களில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது. 

    • பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது.
    • இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

    பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்தது. புதிய M6 மாடலில் உள்ள அம்சங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது ரெட்மி 13 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்ட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    போகோ M6 அம்சங்கள்:

    6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன்

    13 MP செல்ஃபி கேமரா

    108 MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ கேமரா f/2.4 aperture LED ஃபிளாஷ்

    மீடியாடெக் ஹீலியோ ஜி91- அல்ட்ரா பிராசஸர்

    ஹைபிரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ்.

    ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5030 mAh பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ

    டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, GPS + GLONASS

    யு.எஸ்.பி. டைப் சி, NFC

    போகோ M6 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் என்றும், 8 ஜிபி +256 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரம் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
    • டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.

     

    ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.

    ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.

    மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.

    ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

     

    ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.

    அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    • பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
    • உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.

    உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.

    பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.

    தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.

    எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
    • விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்அப்ஸ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்கான தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    பயனர்கள் பாதுகாப்பு சூழலை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

    வாட்ஸ்அப்-பின் தனியுரிமை கொள்கைகளை (privacy policies) மீறும் பயனர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதந்தோறும் லட்சக்கணக்கான இந்திய பயனர்களை தடை செய்து வருகிறது.

    அதனடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை 71 லட்சம் இந்திய பயனர்களை நீக்கியுள்ளது. இதில் 13 லட்சத்து 2 ஆயிரம் பயனர்களை, அவர்களுடைய எந்தவித ரிப்போர்ட் பெறாமல் தடை செய்துள்ளது.

    வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன் தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியும் வகையில் வாட்அஸ் ஏற்பாடு செய்துள்ளது.

    பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இது கணக்குகளை ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்கள் ரிப்போர்ட் அல்லது கருத்துகனை பிளாக் செய்யும்போது, வாட்அப்பின் சிஸ்டம் அதை எடுத்துக் கொள்கிறது. அதன்மூலம் கூடுதல் விசாரணை செய்யப்பட்டு, கணக்குகள் தடை செய்ய அனுமதிக்கிறது.

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
    • புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.

    தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

     


    அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும். 

    • 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் பயன்பெற முடியும்.
    • 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா வழங்கி வருகிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 5ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பிரீபெயிட் பயனர்கள் பயன்பெற முடியும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 13 முறை 10 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் முழு பயன்களை பெற பயனர்கள் பிரீபெயிடில் இருந்து போஸ்ட்பெயிடுக்கோ அல்லது நம்பரை செயலிழக்க செய்யவோ, ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் சலுகையை மாற்றவோ வேண்டாம் என வி தெரிவித்துள்ளது.

     


    வி கியாரண்டி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த சலுகையை பெறும் பட்சத்தில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா 10 ஜி.பி. வீதம் 13 தவணைகளில் வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையை பெற பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 239 துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் உள்ள பிரீபெயிட் சலுகையை பயன்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் இதே சலுகையை தொடர்ச்சியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை மே 25 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    சலுகையில் பயன்பெறுவது எப்படி?

    - பயனர்கள் வி நெட்வொர்க்கில் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும்.

    - ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு மற்றும் ஒரிசா டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்த பயனர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.

    - பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து 121199 அல்லது 199199# என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

    - முந்தைய ஆப்ஷனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யு.எஸ்.எஸ்.டி. எண்களை தொடர்ந்து வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

    - இவ்வாறு செய்த பிறகு, சலுகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.

    - கூடுதல் டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் *199# என்ற யு.எஸ்.எஸ்.டி. குறியீட்டை கொண்டு சரிபார்க்க முடியும்.

    ×