என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • புது சலுகை பல்வேறு பலன்களை வழங்குகிறது.
    • இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பயனர்களுக்கு சீரான கனெக்டிவிட்டி, ஓடிடி சந்தா என பல்வேறு பலன்களை வழங்குகிறது.

    ரூ. 1201 விலையில் கிடைக்கும் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் என ஐந்து ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்விக்கி ஒன் சந்தா, ரூ. 2999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், 12 மாதங்களுக்கு நார்டான் மொபைல் செக்யூரிட்டி சேவை மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரீமியம் வாடிக்கையாளர் சேவை மைய வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ரெட்எக்ஸ் சலுகையை தேர்வு செய்வோர் ஆறு மாதங்களுக்குள் வேறு சலுகையை தேர்வு செய்யும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனினும், பயனர்கள் பழைய ரெட்எக்ஸ் சலுகையில் இருந்து புதிய சலுகையை பயன்படுத்த எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    • பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
    • ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும்.

    மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன்-ஐடியா) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேர பிஎஸ்என்எல் தயாராக உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.

    பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும்.

    இத்துடன் நிறுவனத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைக் குறிப்பிடுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கிறது. ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் இசை போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    PV2399: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,399. இது 395 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

    PV1999: இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 600ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி குரல் அழைப்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்

    PV997: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.997 மற்றும் 160 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

    STV599: இது பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

    STV347: இந்த திட்டத்தின் விலை ரூ. 347 மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் 54 நாட்கள் செல்லுபடியாகும்.

    PV199: இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    PV153: இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 26ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

    STV118: இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 10 ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது.

    • 98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும்.
    • 72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும்.

    ரிலையன்ஸின் ஜியோ செல்போன் சேவை நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் என இரண்டு ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.

    98 நாட்கள் பிளான்

    98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும். இந்த பிளான்படி தினந்தோறும் 2GP டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 2GB என்ற வகையில் 98 நாட்களுக்கு மொத்தம் 196GB டேட்டா வழங்குகிறது. தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். அன்லிமிடெட் 5G டேட்டா வசதி இடையூறு இல்லாமல் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் வசதியையும் உள்ளடக்கியது.

    72 நாட்கள் பிளான்

    72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும். இந்த திட்டத்தில் தினந்தோறும் 2GB டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக 20GB உடன் மொத்தம் 164GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்ய முடியும். அன்லிமிடெட் 5G பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்த காலக்கட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • பயனர்கள் இனி ஐ- போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது.
    • இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ - போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வரும் ஆப்பிள் தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதாவது, பயனர்கள் இனி ஐ-போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே போன்களில் உள்ள கழற்றி மாட்டும் ஸ்டிரிப் மாடலை நீக்கிவிட்டு மின்சார அதிர்ச்சி மூலம் கழலும் ஸ்டிரிப்களை பொறுத்த உள்ளது ஆப்பிள்.

     

    இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ-போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். மேலும் இந்த புதிய ஐ-போனின் டிசைன், சிப்செட் என அனைத்தும் புதிய வடிவமைப்புடன் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

     

    • கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் கடந்தாண்டு 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டது.
    • தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் மொத்தமாக 243 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யலாம்.

    2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.

    இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

    கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் அடங்கும்.

    • உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது.

    மக்களை இணைக்கும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது. படங்கள், பைல்களை அனுப்புவதற்கு பயன்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் எளிமைக்காக அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த அப்டேட்டின்போது சுமார் 35 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது எனத் தெரிவித்துள்ளது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்டவைகளுக்காக இதுபோன்ற அப்டேட்களை செய்து வருகிறது.

    சாம்சங்

    சாம்சங் கேலக்சி ஏஸ் பிளஸ், எக்ஸ்பிரஸ் 2, நோட் 3, கோர், எஸ்4 ஜூம், கிராண்ட், எஸ்4 மினி, எஸ்3 மினி, எஸ்4 ஆக்டிவ்.

    மோட்டோ

    மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ்

    ஐபோன்

    ஐபோன் எஸ்சி, 5, 6, 6எஸ், 6எஸ் பிளஸ்

    ஹூவெய்

    ஹூவெய் அஸ்சென்ட் ஜி525, அஸ்சென்ட் பி6 எஸ், ஜிஎக்ஸ்1எஸ், சி199, ஒய்625

    லொனோவோ

    லொனோவே ஏ858டி, 46600, எஸ்890, பி70

    சோனி

    சோனி எக்ஸ்பெரியா இ3, என்ஸ்பெரியா இசட்1

    எல்ஜி

    எல்ஜி ஆப்டிமஸ் ஜி, 4எக்ஸ் ஹெச்டி, எல்7

    இந்த மாடல் ஸ்பார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப் டேட்டாக்களை பேக்அப் எடுததுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-


    பழைய விலை

    புதிய விலை

    டேட்டா

    செல்லுபடியாகும் காலம் (நாட்கள்)

    179

    199

    2ஜிபி

    28

    455

    509

    6ஜிபி

    84

    1799

    1999

    24 ஜிபி

    365

    265

    299

    ஒரு நாளைக்கு 1ஜிபி

    28

    299

    349

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    28

    359

    409

    ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

    28

    399

    449

    ஒரு நாளைக்கு 3 ஜிபி

    28

    479

    579

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    56

    549

    649

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    56

    719

    859

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    84

    839

    979

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    84

    2999

    3599

    ஒரு நாளைக்கு 2ஜிபி

    365


    • கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
    • கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

    வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

     


    இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம்.

    இந்தியாவில் கோடையில் வெப்ப அலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது போல் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் சில கவனிப்பு தேவை.

    உங்கள் ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிக வெப்பமடைவதை தடுக்கவும் 5 எளிமையான வழிகள்:

    1. நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்

    செல்போன்கள் செயல்படுவதன் மூலம் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும். நேரடி சூரிய ஒளியில் செல்போன்களை பயன்படுத்தினால், அதன் ஸ்கிரீன் வெளிச்சத்தை அதிகரிக்கலாம். னை நிழலில் பயன்படுத்த வேண்டும். இது ஸ்கிரீன் வெளிச்சத்தை குறைவாக வைத்திருக்க உதவும்.

    2. போனுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்

    கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும். பயனாளர்கள் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் செல்போன் குளிர்ந்து அதிக வெப்பமடைவதை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

    3. background apps நிர்வகித்தல்

    background apps-ஆல் செல்போன் அதிக வெப்பமடையும், பேட்டரி பவர் குறையும். போனில் செயலியை பயன்படுத்தவில்லை என்றால், பயனர் ஆப்களை off செய்துவிட வேண்டும். உங்கள் மொபைலை குளிர்ச்சியாக வைத்திருக்க, டேட்டா அல்லது அழைப்புகள் தேவையில்லாதபோது பயனர், பின்புல செயல்முறைகளைக் குறைக்க Airplane mode-க்கு மாறலாம்.

    4. செல்போன் கவரை நீக்க வேண்டும்

    ஸ்மார்ட்போன் கவர்கள் போனை பாதுகாக்கும் அதே வேளையில் அவை வெப்பத்தையும் ஏற்படுத்தும். செல்போன்கள் கூடுதல் வெப்பத்தை உருவாக்குவதால், அது சார்ஜிங்-ல் இருக்கும்போது போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலிவான அல்லது சேதமடைந்த சார்ஜர்கள் அதிக வெப்பத்திற்கு பங்களிக்கும்.

    5. நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்

    நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம். வீட்டிற்குள் வேலை செய்கிறீர்கள் என்றால், சூரிய ஒளி நேரடியாக விழும் ஜன்னல்களிலிருந்து போனை ஒதுக்கி வைக்க வேண்டும். அதேபோல, வாகனம் ஓட்டும்போது காரின் டேஷ்போர்டில் செல்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    இந்த எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் கடுமையான வெப்பத்தின்போது செல்போனை குளிர்ச்சியாகவும் பயனுடையதாகவும் வைத்திருக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம்.
    • டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.279 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏர்டெல் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்-பிலும் வழங்கப்படுகிறது.

    இது ஒரு வித்தியாசமான திட்டமாகும், ஏனெனில் இது குறைந்த செலவில் கிடைக்கும். ஆனால் மற்ற வகையான நன்மைகளை நீக்குகிறது.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.395 பிளானை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது ரூ.279 விலையில் கிடைக்கும் திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் இந்த பிளான், அதிக டேட்டாவை வழங்கவில்லை. பயனர்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 திட்டத்தில் 2GB டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் 600 SMS என்று மொத்தமாக 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.2 ஆகும்.

    இருப்பினும், நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம். இவற்றின் விலை 1 நாளுக்கு ரூ. 19 இல் தொடங்குகிறது. டேட்டா வவுச்சர்களைப் பெற நீங்கள் தொடர்ந்து அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.

    டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். வரம்பற்ற வாய்ஸ் கால் இருப்பதால், அழைப்பின் பலன் எப்போதும் நாள் முடிவில் உதவியாக இருக்கும்.

    இதே சலுகையில் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அப்போலோ 24/7, இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் அடங்கும்.

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    ×