search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ேமாசடி"

    • போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த 10-ந் தேதி நகைக்கடையில் போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பரசுராமனை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், போலி நகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வங்கிகளில் அடமானம் வைத்தல் உள்ளிட்ட குற்ற பட்டியலின் கீழ், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) புதுச்சேரி காவல் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்- இன்ஸ்பெக்டர் ஜெரோம்(38), ஜெரோமின் கள்ளக்காதலி புவனேஸ்வரி(35) காரைக்காலைச்சேர்ந்த ரமேஷ்(32), புதுத்துறை முகமது மைதீன், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ்(38), அவருக்கு உடந்தையாக இருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சிவக்குமார்(45), கடலூரைச் சேர்ந்த சோழன்(52) என, இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று , காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

    • முதலில் ரூ.3.70 லட்சம் மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். மீதி பணம் கொடுக்கவில்லை.
    • தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்த நிலையில் 2 பேர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது63). இவர் கிரானைட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நண்பர் திருப்பத்தூரை சேர்ந்த ஜெயசந்திரன். இவர்கள் இருவரும் கடனாக ரூ.60 லட்சம் பெற சேலம் மாவட்டம், ஜாகீர்காம நாயக்கனப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், ராமு, பூமி நாயக்கனப்பட்டி அருள் ஆகியோரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் அதற்கான ஆவணங்களை பெற்று கொண்டு உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

    முதலில் ரூ.3.70 லட்சம் மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால் மீதி பணம் கொடுக்கவில்லை. ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கி விட்டு பதிவு செய்துள்ளனர்.

    இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்த நிலையில் குப்புசாமி, ஜெயசந்திரன் ஆகியோர் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அந்த பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×