search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில்வே போலீசார்"

    • கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
    • மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே உள்ள கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்பதும், அவர் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதும், நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து தஞ்சை ெரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×