search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வீட் ரெசிப்பி"

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது.
    • தித்திக்கும் சுவையுடன் கேக்

    பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    குங்குமப்பூ- தேவையான அளவு

    கிரீம்- தேவையான அளவு

    பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

    பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- ஒரு மூடி

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

    டோண்டு மில்க்- 200 மில்லி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

    ×