search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dessert Recipe"

    • ஷீர் குருமா ஒரு முகலாய டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெசட்

    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

    சேமியா - முக்கால் கப்

    பேரீச்சைப் பழம் -10

    முந்திரி பருப்பு - கால் கப் (நறுக்கியது)

    பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

    பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது

    சாரை பருப்பு - ஒரு ஸ்பூன்

    காய்ந்த திராட்சை - 15

    சர்க்கரை - கால் கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின்னர் வறுத்த பேரீச்சைப்பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக வைத்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார்.

    இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

    • வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும்.
    • ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும்.

    வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும். இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி உண்ணப்படும் அற்புதமான உணவாகும். இது அனைத்து விழாக்களின் போதும் செய்து அனைவரும் உண்பார்கள். இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடியது.

    பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சுவையில் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி முட்டை- 4

    தேங்காய் பால்- அரை கப்

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்

    கருப்பட்டி- 1½ கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    ஏலக்காய் தூள்- அரை ஸ்பூன்

    செய்முறை:

    கருப்பட்டி வட்லப்பம் செய்ய முதலில் மிக்சி ஜாரில் தேங்காய்களை ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் கருப்பட்டியை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை சுட வைக்க வேண்டும்.

    பின்னர் தேங்காய்ப்பால், கருப்பட்டி கரைசல், அரைத்த சீனி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கரைந்ததும் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.

    அதன்பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்த முட்டை, தேங்காய் பால் கலவையில் கருப்பட்டி கரைந்த நீரினை கலந்து எடுத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் இட்லி பாத்திரத்தினுள் இந்த கலவையை வைத்து மூடி வைக்க வேண்டும். 25 நிமிடம் வட்லபத்தை வேகவிட வேண்டும்.

    வட்டிலப்பம் வெந்ததும் ஒரு கரண்டியால் வட்லபத்தை குத்தி எடுத்து பார்த்தால் கரண்டியில் வட்லப்பம் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான கருப்பட்டி வட்டலப்பம் தயார்.

    • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
    • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

    ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட்- 3

    பால் - ஒரு லிட்டர்

    பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    மில்க்மெய்டு- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • அல்வாவின் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை.
    • எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் அல்வா நிச்சயம் இருக்கும்.

    நாக்கில் வழுக்கிக்கொண்டு போகும் இதன் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை தொடங்கி, மதுரைப் பக்கம் திருவிழாக்களில் கிடைக்கும் `அல்வா' வரை இதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்களே அதிகம். எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் நிச்சயம் இது இல்லாமல் இருக்காது என்பதே அல்வாவின் பெருமைக்குச் சான்று. அல்வா என்றால் நாவில் வைத்தவுடன் கரைய வேண்டும். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று சுவையான அனானசி பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசிப்பழம் - 250 கிராம்

    பாதாம் - 250 கிராம்

    முந்திரி - 15 கிராம்

    பால்கோவா - 150 கிராம்

    சர்க்கரை - 125 கிராம்

    நெய் - 150 கிராம்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் அன்னாசி பழத்தின் தோலை சீவி அதை நன்றாக சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமாக பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி அது சூடாகியதும் வெட்டிய அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பழத்தில் உள்ள ஈரம் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் பருப்பை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விடலாம். இதன் பிறகு பாதாம் பருப்பை இறக்கி அதில் உள்ள தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பாதாமை நாம் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின்னர் இதனுடன் தேவையான அளவு சக்கரை மற்றும் பால்கோவா சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும். இது நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் பாதாமை நறுக்கி மேலே போட்டு அலங்கரித்து எடுத்து பரிமாறலாம். சுவையான தித்திப்பான அன்னாசி, பாதாம் அல்வா ரெடி.

    • வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான குளிர்பானம் தான் ரோஸ் மில்க்.
    • இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள்.

    வெயில் காலம் வந்து விட்டது. நம்முடைய வீட்டிலேயே குளிர்பானங்களைத் தயாரித்து குடிப்பது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வரிசையில் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குளிர்பானம் தான் இந்த ரோஸ் மில்க். பாலை காய்ச்சி, சர்க்கரையை போட்டு, ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலக்கினோம் என்று இல்லாமல், இதற்கென்று ஒரு பக்குவம் உள்ளது. முறையாக இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள். இதனுடைய சுவைக்கு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரோஸ்மில்க் சாகோ டிரிங்க்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஜவ்வரிசி- ஒரு கப்

    ரோஸ்மில்க் எசன்ஸ்- தேவையான அளவு

    அகர் அகர்- ஒரு ஸ்பூன்

    கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    சர்க்கரை- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் அகர் அகர் சேர்த்துய் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் பால், சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க் எசன்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து அதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கு வைக்க வேண்டும். இதனை ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஜெல்லிகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ரோஸ்மில்க் ஜெல்லி தயார்.

    பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பால் ஆறியதும் அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அந்த பாலில் வேகவைத்த ஜவ்வரிசி, சிறிது சிறிதாக வெட்டிவைத்துள்ள ரோஸ்மில்க் ஜெல்லி, ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து சில்லென்று பருகலாம். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ரோஸ்மில்க் சாகோ டிரிங்க் ரெடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

    • ஃபிரஷ்ஷான தயிர் இருந்தா இந்த ஸ்வீட்டை செய்து பாருங்கள்.
    • வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும்.

    வீட்டில் ஃபிரஷ்ஷான தயிர் இருந்தா இந்த ஸ்வீட்டை செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவுக்கு அருமையாக இருக்கும். இந்த கோடை காலத்தில் சில்லென்று சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 200 கிராம்

    ஏலக்காய் தூள்- இரு சிட்டிகை

    குங்குமப்பூ- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் வெள்ளை துணி போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது கெட்டியான தயிர் கிடைக்கும். இந்த தயிரை நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டி இல்லாமல் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

    இந்த கலவையில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ கலந்த பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை கிண்ணங்கள் அல்லது கேக் மோல்டு இவற்றில் வெண்ணெய் தடவி அதில் ஊற்ற வேண்டும். இதனை அலுமினிய பேப்பர் கொண்டு மூடி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்வீட் ரெடி.

    • உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது.
    • அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு சர்பத் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும்.

    குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். மேலும், வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் சர்பத் எப்படி தாயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைபிடி

    சர்க்கரை- 200 கிராம்

    கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்

    பால்- அரை லிட்டர்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் சப்ஜா விதைகளை நீரில் பொட்டு உறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இளநீரினை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்து போகிற அளவுக்கு கலந்துவிட வேண்டும். பின்னர் இதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒருமணிநேரம் வைக்க வேண்டும். ஒருமணிநேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது ஜெல்லி மாதிரி இருக்கும். இதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இந்த பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இளநீர் சர்பத்தினை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

     இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த இளநீர் சர்பத் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • ஸ்வீட் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
    • பார்ட்டி நாட்களிலும் இதனை செய்து அசத்தலாம்.

    ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். பார்ட்டி நாட்களிலும் இதனை செய்து அசத்தலாம். மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பால் பவுடர்- ஒரு கப்

    மைதா- ஒன்றரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை

    உப்பு- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- ஒரு கப்

    பால்- 200 கிராம்

    நெய்- 2 ஸ்பூன்

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மாவினை ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் நெய் விட்டு கலந்து பால் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு அழுத்தமாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சப்பாத்தி மாதிரி திரட்டி அதனை சதுர சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

    அதாவது குலோப்ஜாமூன் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் செய்ய வேண்டும். பாகு பதம் வந்தவுடன். நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது ஊற்றி புரட்டி எடுத்தால் சுவையான மில்க் கேக் தயார்.

    • ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது.
    • தித்திக்கும் சுவையுடன் கேக்

    பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    குங்குமப்பூ- தேவையான அளவு

    கிரீம்- தேவையான அளவு

    பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

    பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- ஒரு மூடி

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

    டோண்டு மில்க்- 200 மில்லி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

    • வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
    • வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.

    பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 5

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    தண்ணீர் - 1/4 கப்

    முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    ×