search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வீட் பாக்ஸ்"

    • மாணவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் மாணவர்களை கடைக்கு அழைத்து சென்று உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருகிறது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    அதற்காக அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர் .

    விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும், பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவ -மாணவிகளும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தீபாவளி கொண்டாட்டங்க ளையும் பண்டிகை தரும் அளவற்ற மகிழ்வான தருணங்களையும் தவற விடக்கூடாது என்ப தற்காக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனை முன்னிட்டு ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திப்பியக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாண வர்களையும் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுடன் அவர்களது இல்லத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை தீபாவளி பரிசாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் வாங்கிக் கொடுத்தனர்.

    மேம்பாலம் பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கும் தேவையான புத்தாடைகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .

    மேலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் 10 வகையான இனிப்புகள் அடங்கிய ஸ்வீட்பாக்ஸ் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்கள் தெரிவிக்க ப்பட்டது.

    மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் , இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஆதர வற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களை மகிழ்வாக கொண்டா டுவதற்காக தொடர்ந்து பல்வேறுநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருவதாக தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×