search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில்"

    • கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

    பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×