search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் சாகுபடி முறைகள் குறித்து"

    • பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இழுப்பிலி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜமோகன் தலைமையேற்று விவசாயி களை வரவேற்று மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் பாரம்பரிய ரகங்கள் பற்றியும், அங்கக வேளா ண்மையின் முக்கியத்து வம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    மேலும் அங்கக வேளா ண்மை சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்பாடு விரிடி, சூடோமோனஸ் போன்ற உயிர்காரணிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்று பெறுவதன் முக்கியத்துவம், அதை இணைய வழியில் பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டி னை ராஜேந்திரன் மற்றும் கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×