search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் சாகுபடி"

    • சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    சென்னிமலை வட்டா ரத்தில் குப்பிச்சிப்பா ளையம் கிராமத்தில் பாரம்பரிய வே ளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் தலைமையிலும், குப்பிச்சி பா ளையம் ஊராட்சி மன்ற தலை வர் பொன்னுச்சாமி முன்னி லையிலும் நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விதைச்சா ன்று அலுவலர் கணேசமூர்த்தி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு அதன் நன்மை கள் மற்றும் அங்ககச்சான்று பெறுவ தற்கான நடைமுறை கள் இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், உழவர் தொகுப்புகள் உருவா க்குதல் போன்றவற்றை தெளி வாக விளக்கிக் கூறினார்.

    சென்னிமலை வேளா ண்மை உதவி இயக்குநர் சாமு வேல் அங்கக வேளாண்மை முறையில் பயிர்சாகுபடி செ ய்வதால் என்னென்ன பய ன்கள் என்பது குறித்து பேசி னார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலு வலர் யுவராஜ் மண் பரிசோ தனை குறித்தும் மண் மாதிரி கள் எடுப்பது குறித்தும் விள க்க மாக எடுத்து கூறினார்.

    மேலும் இப்பயிற்சியில் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை குறித்து அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் விள க்கமாக எடுத்துரைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசா யக்குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சி க்கான ஏற்பா டுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணி, கார்த்திகேயன் மற்றும் தொகுப்பு ஒருங்கி ணைப்பா ளர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×