search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெல்லம் விலை உயர்வு"

    • பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சேளூர், கொந்தளம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், கள்ளிப்பாளையம், கொத்த மங்கலம், கபிலக்குறிச்சி, கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லி கோவில், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை ஒன்றிய பகுதிக ளில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    சந்தை

    ஆலைகளில் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பா ளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3000 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.

    வெல்லம் சிப்பம் ரூ.1,400

    சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.

    இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
    • 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், சேளூர், செல்லப்பம்பாளை யம், கபிலக்குறிச்சி, கபி லர்மலை, பிலிக்கல்பாளை யம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபா ளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், சிறு நெல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளி பாளையம், திடுமல், அரசம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, மாரப்பம்பா ளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை என தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்லங்களை நன்றாக உலர்த்தி 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிய வியாபாரிகள் தமிழகத்திலுள்ள கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1180-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிற்பம் ரூ.1,220-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1250க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1175 விற்பனையானது. உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    • கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் கரும்புகளை கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,400 வரை விற்பனை செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் கரும்புகளை கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,400 வரை விற்பனை செய்கின்றனர். இந்த கரும்புகளை கொண்டு உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெல்லம் ஏலம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து, தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,190 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,170 வரையிலும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,170 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அச்சு வெல்லம் ரூ.50 உயர்வடைந்தும், உருண்டை வெல்லம் ரூ.20 வீழ்ச்சி அடைந்தும் உள்ளது.

    ×