என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் அச்சு வெல்லம் விலை உயர்வு
    X

    பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் அச்சு வெல்லம் விலை உயர்வு

    • கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் கரும்புகளை கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,400 வரை விற்பனை செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் கரும்புகளை கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,400 வரை விற்பனை செய்கின்றனர். இந்த கரும்புகளை கொண்டு உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெல்லம் ஏலம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து, தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,190 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,170 வரையிலும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,170 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அச்சு வெல்லம் ரூ.50 உயர்வடைந்தும், உருண்டை வெல்லம் ரூ.20 வீழ்ச்சி அடைந்தும் உள்ளது.

    Next Story
    ×