search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டி கொலை"

    • ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது.
    • இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி.

    இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது. இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றிய சரவ ணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி பகுதியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அவரது நண்பர் அலெக்ஸ்பா ண்டி யன் லேசான வெட்டுக்கா யங்களுடன் உயிர் தப்பினார்.

    தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது

    கொலை யுண்ட உதய சங்கர், வசதியான வர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வந்தார். அதுபோல் சேலம் சின்னேரி வாய க்காட்டை சேர்ந்த 26-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகன் (49) என்பவரிடம் உதயசங்கர், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்ப டுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த தால் அவரை கூலிப்படை கும்பல் தீர்த்துக்க ட்டியது தெரிய வந்தது.

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ள ப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, முருகன் , காமலா புரத்தை சேர்ந்த பன்னீ ர்செல்வம் (23), 3 ரோடு ஜெயா நகரை சேர்ந்த ஆனந்த் (26) என அடுத்த டுத்து 5 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து தலைமறை வாக இருந்த சேலம் டவுன் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவை சேர்ந்த கணேஷ்மு த்துராஜ் மகன் விக்னேஷ்கு மார் (24) என்பவர் நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

    இவருடன் சேர்த்து வெள்ளி வியாபாரி கொலை யில் கைதானவர்க ளின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இரவு, உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.
    • வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்டினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மோகன் (27), கூலித்தொழிலாளி.

    இந்த நிலையில் அவரும், சோமநாதபுரத்தை சேர்ந்த உமேஷ் (24) மற்றும் கார்த்திக் (25) ஆகியோர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஏரி அருகே பணம் வைத்து சூதாடினர். இதில் உமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ரூ.20,000- ஜெயித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து இரவு , உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.

    அப்போது, நண்பர் மஞ்சு என்பவருடன் அங்கிருந்த மோகன், உமேஷ் மற்றும் கார்த்திக்கிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை தாக்கி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    மோகனின் நண்பர் மஞ்சுவும் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுபட்ட மோகனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனினடையே, உமேசும், கார்த்திக்கும் நேற்று இரவு ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்து, மோகனை வெட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசாரை அலைக்கழித்தது யார்? விசாரணை
    • ஏராளமானோர் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அம்பேத்கர் காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு லத்தேரி பஸ் நிலையத்தில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று அங்கு இருந்த கடையின் உரிமையாளர் பாபு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முறியதால் பாபு மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய வாலிபரை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபரை கொலை செய்து வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் கை, கால் தலையை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி, விருதம்பட்டு மற்றும் தனிப்படை போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே விருதம்பட்டு பாலாற்று பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சுடுகாடு, பாலாறு பாலம் ஆகிய பகுதிகளில் வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் இறங்கியும் ஆற்றில் உள்ள செடி, கொடி, புதர்கள் மண்டி கிடந்த பகுதிகளிலும் உடல் ஏதேனும் கிடக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் அங்கு விரைந்து வந்தார். அங்கு அவர் சுடுகாடு மற்றும் பாலாற்று பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்:-

    வாலிபரின் செல்போன் டவர் ஒடுகத்தூர் பகுதியில் காண்பித்தது. சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பினோம்.

    இதனால் போலீசார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.பாலாற்றில் ஏராளமான போலீசார் உடலை தேடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரவியது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்களும், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகன ங்களை பாலத்தின் மீது நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு வேடிக்கை பார்த்தவர்களை விரட்டினர்.

    தேடுதல் முடிவில் அங்கு தலையோ, கை, கால்களோ, உடலோ எதுவும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்பியது தெரியவந்தது.

    தவறான தகவலை பரப்பி போலீசாரை அலைக்கழிக்க விட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
    • இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 37).கூலி தொழிலாளி. இவரது பெரியம்மா மகன் சேலம் அம்மாபேட்டை வைத்திய தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிரபு (38). கூலி தொழிலாளி.

    இவர் ராசிபுரத்தில் உள்ள அவரது சித்தி மகன் முரளிக்கு கடனாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு

    29-ந் தேதி ராசிபுரத்தில் உள்ள சித்தி மகன் முரளியிடம் பிரபு பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி முரளியின் மனைவி ஜோதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் ராசிபுரம் போலீசார் பிரபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி ராசிபுரத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்ட னையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார். நீதிபதியின் தீர்ப்பை அடுத்து பிரபுவை ராசிபுரம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×