என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Try to cut and kill"

    • கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
    • திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான் (35) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    அனீஸ் ரகுமானின் மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்துடன் அவரது மனைவி சென்று விட்டார். அப்போது முதல் பிரசாத் மீது அனீஸ் ரகுமானுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    இன்று காலை பிரசாத் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அனீஸ் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றார்.

    இதனால் சுதாரித்துக் கொண்டு பிரசாத் ஓட ஆரம்பித்தார். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஓடிய போது அவரை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதை பார்த்ததும் பொதுமக்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அனீஸ் ரகுமானை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரசாத் மீது திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பட்ட பகலில் கோர்ட்டு வளாகம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
    • இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 37).கூலி தொழிலாளி. இவரது பெரியம்மா மகன் சேலம் அம்மாபேட்டை வைத்திய தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிரபு (38). கூலி தொழிலாளி.

    இவர் ராசிபுரத்தில் உள்ள அவரது சித்தி மகன் முரளிக்கு கடனாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு

    29-ந் தேதி ராசிபுரத்தில் உள்ள சித்தி மகன் முரளியிடம் பிரபு பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி முரளியின் மனைவி ஜோதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் ராசிபுரம் போலீசார் பிரபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி ராசிபுரத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்ட னையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார். நீதிபதியின் தீர்ப்பை அடுத்து பிரபுவை ராசிபுரம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×