search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் புகார்"

    • ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குடிமங்கலம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படுகின்ற தண்ணீரில் முறைகேடு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சிகள் முறைகேடாக தண்ணீரை எடுத்து வருகின்றன. உடுமலை வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கட்டிடங்கள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதி வழியாக செல்கின்ற பி.ஏ.பி. கால்வாய் கரையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    உடுமலை-பழனி சாலையில் உள்ள அண்ணா குடியிருப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. வேகத்தடுப்புகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்கடவு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் பாதை பராமரிப்புக்காக தென்னை மரத்தின் ஓலைகளை அடிக்கடி வெட்டுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. உடுமலை நில அளவை துறை செயல்படாத துறையாகவே உள்ளது. உடுமலை பகுதியில் நில மோசடி அதிக அளவில் உள்ளது. எனவே ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மீது தனி கவனம் செலுத்துவதுடன் நில மோசடியை தடுக்க வேண்டும். துங்காவி அருகே கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளால் சாலையோரத்தில் உள்ள மல்பெரி செடிகள் தூசி படிந்து வளர்ச்சி பாதித்தும், பட்டுப்புழுக்கள் செத்தும் விடுகிறது.

    குடிமங்கலம் பகுதியில் மாட்டுச்சந்தை, ஆட்டுச் சந்தை அமைத்து தர வேண்டும்.தேங்காய் பருப்பு கொள்முதலை அதிகரிக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் காட்டுப் பன்றிகள் வாழை, மக்காச்சோளம், பட்டு பூச்சி செடி உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகிறது. அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சேரிமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகிப்போனது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் சுந்தரம் (உடுமலை), பானுமதி (மடத்துக்குளம்), கார்த்திகேயன் (குடிமைப்பொருள்) உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர்.
    • நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    பி.ஏ.பி., விவசாயிகள் நலச்சங்கம், உப்பாறு அணை விவசாயிகள் சங்கம் மற்றும் பூசரநாயக்கன்பாளையம் ஏரி விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., தண்ணீரை ஒரு குறிப்பிட்ட கிணறு வாயிலாக, 35 நாட்களாக தினமும் 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் திருடப்பட்டு 100 டேங்கர் லாரி அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நீர் திருட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது.குறிப்பிட்ட நீர் திருட்டு வாயிலாக மட்டும், பி.ஏ.பி., தண்ணீர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

    இதுபோன்று பல்வேறு இடங்களில் நீர் திருட்டு நடந்து வருவதால் 2 சுற்றுகள் வினியோகம் செய்யப்பட வேண்டிய தண்ணீர் ஒரே சுற்று அளவுக்கு நான்காம் மண்டல ஆயக்கட்டுதாரர்களுக்கு அரை, குறையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் வேலுசாமி கூறுகையில், பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல இடங்களில் திருடப்படுகிறது என தொடர்ந்து கூறி வருகிறோம்.இதனால் 2 சுற்றுகளுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டிய, 2,500 மில்லியன் கன அடி தண்ணீரை ஒரே சுற்றில் முடித்து விட்டனர். நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறுகையில், "நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 35 மூட்டைகளாவது நெல் கணக்கிட்டு எடுக்க வேண்டும்" என்றார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களில் மீன் பிடிக்க ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தார்.

    ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக ஏலம் போக வேண்டிய ஏரி மீன்களை உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ரூ.28 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் விடுவதாக புகார் தெரிவித்தார்.

    • விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த மாதம் விவசாயிகள் வழங்கிய மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பீனியாறு பாதுகாப்பு விவசாயி சங்கத்தினர், கழிவுநீர் கலந்த தண்ணீரை வாட்டர் பாட்டிலில் எடுத்து வந்தனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, பீனியாறு ஒட்டி இருப்பதால், பீணியாற்றில் வருகின்ற தண்ணீரை ஆலைக்குள் தேக்கி வைப்பதற்காக, 5 ஏக்கர் அளவில் ராட்சத குளம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆலையில் இருந்து வெளியேறுகின்ற ரசாயன கழிவுகள் பீனி ஆற்றில் கலப்பதால், அந்தப் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. மேலும் 5 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய நிலங்களில் மண் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இல்லாமல் விவசாயம் பாழடைந்து வருகிறது. எனவே அந்த மரவள்ளி ஆலை அரசின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதால், அதனை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்பொழுது புகாரின் அடிப்படையில் அந்த ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    ஆனால் விவசாயிகள் மின்சாரம் துண்டிப்பு என்பது தற்காலிகமான நடவடிக்கை தான். அதனை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் அந்த ஆலையை அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் அவ்வாறு பார்வையிடும் பொழுது விவசாயிகளையும், ஆய்வு செய்வதற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் விவசாயி முரளி என்பவர் உழவன் செயலி சரியாக வேலை செய்வதில்லை. இதில் விவசாயிகள் எவ்வாறு அரசின் சலுகைகளை பெற முடியும் எனவே அதனை சரி செய்ய வேண்டும் எனவும் புகார் தெரிவித்தார்.

    • பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் நடந்த தென்னை விவசாயிகள் மாநில மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் பயிருக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தனியார் நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வருவதோடு இணை பொருட்கள் வாங்க வேண்டும்என வலியுறுத்துகின்றனர். எனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.தமிழக பயிர் சாகுபடிக்கு ஏற்ப, உர வகைகள் இறக்குமதி செய்யப்படாததால் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் உரங்கள் கிடைக்காத சூழல் உள்ளது. இப்பிரச்னைக்கு, அரசு முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சிமலையில், ஒரு கி.மீ., தூரத்திற்கு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள், விவசாயிகள் மட்டுமன்றி மலைமேலுள்ள நகரங்களும் பாதிக்கும் சூழல் உள்ளது.இத்தீர்ப்பு குறித்து கேரள அரசு ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து, முன்னதாகவே நீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை அதிகரிக்கும் வகையிலும்விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    இத்திட்டத்தில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். குறைந்தபட்சம்ஒரு ஹெக்டர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி தொகுப்பு மாற்ற வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

    ×