search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரி மீன்களை ஏலம் விடுவதில் முறைகேடு- விவசாயிகள் புகார்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரி மீன்களை ஏலம் விடுவதில் முறைகேடு- விவசாயிகள் புகார்

    • காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறுகையில், "நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 35 மூட்டைகளாவது நெல் கணக்கிட்டு எடுக்க வேண்டும்" என்றார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களில் மீன் பிடிக்க ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தார்.

    ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக ஏலம் போக வேண்டிய ஏரி மீன்களை உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ரூ.28 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் விடுவதாக புகார் தெரிவித்தார்.

    Next Story
    ×