search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை."

    • மேலூர் அருகே ஆடி களரி திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து நடந்தது.
    • மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சின்ன சூரக்குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பட்டசாமி கோவிலின் களரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. இதில் சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பு அமைந்திருக்கும் மிக பழமையான ஆத்திமரத்தில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலின் சார்பிலும் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை பலியிட்டனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசைவ விருந்து சாப்பிட்டனர். இந்த திருவிழா நடைபெறுவதன் மூலம் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    ×