search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசைவ விருந்து"

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
    • இதில் பரமக்குடிக்கு வருகை தந்த இளைஞர்களுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. அசைவ விருந்து வழங்கினார்.

    பரமக்குடி

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

    இதைெயாட்டி இளை ஞர் அணி மாநில மா நாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்தது.

    பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணிக்கு முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி கிரேவி, வஞ்சரம் மீன் வறுவல், சிக்கன், மீன் குழம்பு என விருந்து அளிக்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

    • மேலூர் அருகே ஆடி களரி திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து நடந்தது.
    • மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சின்ன சூரக்குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பட்டசாமி கோவிலின் களரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. இதில் சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பு அமைந்திருக்கும் மிக பழமையான ஆத்திமரத்தில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலின் சார்பிலும் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை பலியிட்டனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசைவ விருந்து சாப்பிட்டனர். இந்த திருவிழா நடைபெறுவதன் மூலம் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    • முதலில் வேட்டைக்கருப்புக்கு பொங்கல் வைத்து அதன்பின்னர் வழிபாட்டை தொடங்கினர்.
    • கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் பழமையான வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்த கோவில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, கோழி, அரிசி மற்றும் உணவு பொருட்களை கொண்டு வேட்டைக்கார கருப்புக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அவை பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் தங்கள் காணிக்கையை தொடர்ந்து வழங்கி வந்தனர்.

    முதலில் வேட்டைக்கருப்புக்கு பொங்கல் வைத்து அதன்பின்னர் வழிபாட்டை தொடங்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

    இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

    ×