search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருந்து"

    • நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • ருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலின் திருவிழா ஓராண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கோவிலின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்துக்கு பிறகு இந்த வருடத்திற்கான திருவிழா ஆனி மாதம் 28-ந் தேதி மஞ்சள் முடிப்புடன் தொடங்கியது. கடந்த செவ்வாய் இரவு அணி வைத்து நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காட்டு கோவிலுக்கு படைக்களம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து 1200 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வாங்கப்பட்டு அதனை வெட்டி பொதுமக்களுக்கு கிடாய் விருது நடந்தது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சமையல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக கோவில் அருகே பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிடாய் விருந்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    இதில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று திருவிழாவை முன்னிட்டு பூத நாச்சி அம்மன் மற்றும் நாட்ராய சாமி சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது.
    • இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது. பொங்களாயி அம்மன் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.

    பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நேர்த்தி கடனாக ஆடுகளை பலியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வழி பட்ட பிறகு விடிய விடிய கறி விருந்து(சமபந்தி விருந்து) பொதுமக்களுக்கு வழங்குவார்கள். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் சேலம்,நாமக்கல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, ராசிபுரம் உள்பட பல்வேறு கிராமபகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்பாடுகளை தர்ம கருத்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×