search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகா ரமேஷ்"

    • காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • விநாயகா ரமேஷ் பேசுகையில், அனைத்து காசநோயாளிகளுக்கும் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.

    கோவில்பட்டி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் இல்லா தமிழகம்-2025 எனும் இலக்கை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை நொச்சிகுப்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக காசநோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து பொருட்களை சேவையாக வழங்கி வரும் கோவில்பட்டி ரோட்டரி கிளப்பிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ரோட்டரி சங்கம் சார்பாக, சங்க முன்னாள் துணை ஆளுநரும், இலவச சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளருமான விநாயகா ரமேசிடம் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் (காசம்) சுந்தரலிங்கம் ரோட்டரி சங்கத்தின் சேவையை பாராட்டி பேசினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற விநாயகா ரமேஷ் பேசுகையில், காசநோய் இல்லாத கோவில்பட்டி உருவாகும் வரை சிகிச்சை பெறும் அனைத்து காசநோயாளிகளுக்கும் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் மற்றும் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×