என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதிகளை மீறிய"
- போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
- 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
இதில் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 133 வழக்கு, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 8 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 4 வழக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
இதில் மதுபோதையில் வாகன ஓட்டிய மற்றும் செல்போன் பேசியபடி சென்ற 4 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் பல்வேறு பணிக்கு சென்று விட்டதால் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்துள்ளது.
வரும் நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்