search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிகளை மீறிய 207 பேர் மீது வழக்கு பதிவு
    X

    போக்குவரத்து விதிகளை மீறிய 207 பேர் மீது வழக்கு பதிவு

    • போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
    • 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    இதில் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 133 வழக்கு, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 8 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 4 வழக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

    இதில் மதுபோதையில் வாகன ஓட்டிய மற்றும் செல்போன் பேசியபடி சென்ற 4 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

    ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் பல்வேறு பணிக்கு சென்று விட்டதால் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்துள்ளது.

    வரும் நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×