search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடிய விடிய நடந்த"

    • தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
    • சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரள, தெலு ங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    மழை பெய்தாலும் மழையை பொறுப்படுத்தாமல் வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்தம் கொள்முதல் விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைபோல் பெண்களுக்கான காட்டன் சுடிதார் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆண்களுக்கான பேண்ட், சட்டை, வேஷ்டி விற்பனையும் விறு விறுப்பாக நடந்தது.

    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும் போது,

    கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த வாரம் ஜவுளி வார சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.

    இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்துள்ளது. இதனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் சாலையின் இருபுறம் சிறு சிறு ஜவுளி கடைகள் போடப் பட்டிருந்தன. அதிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேப்போல் சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம், பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கும் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    ×