search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் கோயல்"

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு பயந்து காங்கிரஸ் பின்வாங்குவதாக மத்திய மந்திரி விஜய் கோயல் குற்றம்சாட்டினார். #RafaleDiscussion #VijayGoel
    புதுடெல்லி:

    மேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி விஜய் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல், காவிரி நதிநீர், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ என அனைத்து விவகாரங்களுக்கும் விவாதங்கள் வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும். ரபேல் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடத்துவதில் இருந்து காங்கிரஸ் பின்வாங்குகிறது. அதற்கு பதிலாக முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்புகிறது.



    எந்த பிரச்சினையாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்பி வருவது தெளிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #RafaleDiscussion #VijayGoel
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் முன்னாள் மத்திய மந்திரி விஜய் கோயல் டெல்லி ஜாமியா மசூதி தலைமை இமாமை இன்று சந்தித்தார். #SamparkforSamarthan #GoelmeetsJamaMasjidShahiImam #JamaMasjid
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், மத்திய விளையாட்டுத்துறை முன்னாள் மந்திரி விஜய் கோயல் இன்று டெல்லி ஜாமியா மசூதியின் தலைமை இமாம் மவுலானா சையது முஹம்மது புஹாரியை இன்று சந்தித்து ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை தலைமை இமாமிடம் அளித்த அவர் இதுதொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி ஜாமியா மசூதி தலைமை இமாம் மவுலானா சையது முஹம்மது புஹாரி, ‘நாடு முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வெளியான நிலையில் அவர்கள் (பா.ஜ.க.வினர்) இப்போது நம்மிடம் வந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதாவது இந்த அரசு ஏதாவது செய்தால், அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமையும்’ என்று குறிப்பிட்டார். #SamparkforSamarthan #GoelmeetsJamaMasjidShahiImam #JamaMasjid
    ×