search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பிணம் மீட்பு"

    • அடித்து கொலையா? போலீசார் விசாரணை
    • அழுகிய நிலையில் கிடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த சின்ன புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்காததால் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பரவமலை வனப்பகுதியில் மரத்தில் சதீஷின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் கிடந்த சதிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமான வாலிபர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி. வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து வந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டார்.

    உடல் மீட்பு

    பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டனர்.

    அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த வாலிபர் சிவப்பு கலரில் டீசர்ட், கருப்பு கலரில் பேண்ட் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    பின்னர் போலீசார் அந்த வாலிபர் யார் என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் என்று தெரிய வில்லை.

    இதனை தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையா?

    இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது மதிக்க தக்க வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவரை யாராவது கொலை செய்து பி.ஏ.பி. வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×