search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரவமலை காப்பு காட்டில் மரத்தில் தொங்கிய வாலிபர் பிணம் மீட்பு
    X

    பரவமலை காப்பு காட்டில் மரத்தில் தொங்கிய வாலிபர் பிணம் மீட்பு

    • அடித்து கொலையா? போலீசார் விசாரணை
    • அழுகிய நிலையில் கிடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த சின்ன புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்காததால் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பரவமலை வனப்பகுதியில் மரத்தில் சதீஷின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் கிடந்த சதிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமான வாலிபர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×