search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் மோதியது"

    • அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது.
    • சென்னம் மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப் பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சுண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சென்னம்மாள் (வயது50). இவரது மகன் பத்மநாபன் (25). இந்த நிலையில் தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து மத்தூருக்கு வந்தனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை-பெங்களூரு சாலை அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சென்னம்மாளையும், பத்மநாபனையும் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னம்மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப்பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை மற்றும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன்
    • வண்டு ராயன்பட்டு சாலையில் சென்றார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன் (வயது 26). தவில் வாசிப்பவர். இவர் நேற்று இரவு புவன கிரிக்கு சென்று, இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வண்டு ராயன்பட்டு சாலையில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கலைவாணன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலைவாணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்ற னர்.

    • ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65), பலா விவசாயி, இவர் தனது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பலாப்பழங்களை இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வ தற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார். பண்ருட்டி சென்னை சாலை பணிக்கன் குப்பம்அ ருகே வந்து கொண்டி ருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி ராமகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    ×