பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலா விவசாயி பலி

ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலா விவசாயி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65), பலா விவசாயி, இவர் தனது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பலாப்பழங்களை இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வ தற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார். பண்ருட்டி சென்னை சாலை பணிக்கன் குப்பம்அ ருகே வந்து கொண்டி ருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி ராமகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com