என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வல்லபாய் பட்டேல்"
போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மன்ட்சார் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதற்கு கடந்த கால காங்கிரஸ் அரசுகளே காரணம்.
நாட்டில் 55 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்கள் வகுத்த விவசாய கொள்கைகளால் விவசாயிகளுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் அவர்களை பாழாக்கும் நிகழ்வுகள்தான் நடந்தன.
சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் முதல் பிரதமராக பதவி ஏற்று இருந்தால் இந்த நிலைமைகளை எல்லாம் மாற்றி இருப்பார். விவசாயிகள் இந்த கஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.
காங்கிரஸ் அரசின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மேம்பாட்டுக்கு கொண்டு வர நாங்கள் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
ஆனால், அவர்கள் 50, 60 ஆண்டுகளாக செய்த தவறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய முடிய வில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் தான் ஆகிறது. காங்கிரஸ்காரர்களுக்கு ஆளுவதற்கு கிடைத்த காலங்களில் பாதி அளவு காலம் எங்களுக்கு கிடைத்தால் விவசாயிகள் விவகாரத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
பாரதிய ஜனதா அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு அதை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
ஆனால், நாங்கள் தவறான வாக்குறுதிகள் எதையும் கொடுக்கவில்லை. இந்திரா காந்தி ஆட்சியில் வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.
இது சம்பந்தமாக பெரிய கோஷம் எல்லாம் எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்கள் தான் இப்போது பாரதிய ஜனதாவை குறை கூறுகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். #PMModi #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்