search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருங்கால"

    • தக்கலையில் 27-ந்தேதி நடக்கிறது
    • தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி அக்ேடாபர் மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தக்கலை கல்குளம் தாசில்தார் அலு வலகம் அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், பிராந்திய குழு உறுப்பினர்கள், தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றிற்கான திருத்தம் தொடர்பாகவும் மனு கொடுக்கலாம்.

    தொழில் நிறுவனங்கள் சட்ட திட்ட விதிகள் தொடர்பான சந்தேகங்கள், யு.ஏ.என். ஒதுக்கீடு செய்தல், புதிய பணியாளர்களை சேர்ப்பது தொடர்பான உதவிகளை பெற இந்த நிகழ்ச்சியை பயன் படுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பங்கு தாரர்கள் தங்கள் குறை களை நேரடி யாகவோ, தபால் மூலமாக வோ அலுவலக மின் அஞ்சல் முகவரி ro.nagercoil@epfindia.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
    • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

    கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

    2.57 லட்சம் பெண்கள் பதிவு

    பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாடு 2-வது இடம்

    மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

    2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    ×