search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைப்புநிதி"

    • தக்கலையில் 27-ந்தேதி நடக்கிறது
    • தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி அக்ேடாபர் மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தக்கலை கல்குளம் தாசில்தார் அலு வலகம் அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், பிராந்திய குழு உறுப்பினர்கள், தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றிற்கான திருத்தம் தொடர்பாகவும் மனு கொடுக்கலாம்.

    தொழில் நிறுவனங்கள் சட்ட திட்ட விதிகள் தொடர்பான சந்தேகங்கள், யு.ஏ.என். ஒதுக்கீடு செய்தல், புதிய பணியாளர்களை சேர்ப்பது தொடர்பான உதவிகளை பெற இந்த நிகழ்ச்சியை பயன் படுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பங்கு தாரர்கள் தங்கள் குறை களை நேரடி யாகவோ, தபால் மூலமாக வோ அலுவலக மின் அஞ்சல் முகவரி ro.nagercoil@epfindia.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×