search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனப்பகுதி தொட்டி"

    • வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.
    • வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தாகத்தோடு தண்ணீரை தேடி மலை அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.

    கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவை மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.

    எனவே வன விலங்குகளின் தாகம் தீர்க்க ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உடுமலை வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.

    அத்துடன் உடுமலை- மூணாறு சாலையை வனவிலங்குகள கடந்து அணைப்பகுதிக்கு செல்வதும் சற்று குறைந்து உள்ளது. வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால் தாகத்தை தீர்ப்பதற்காக விளை நிலங்களை தேடி செல்ல வேண்டிய நிலையும் வனவிலங்களுக்கு குறைந்துள்ளது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் சூழல் ஏற்பட்டால் வாகனங்களை பொறுமை காத்து இயக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    ×