search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர் சங்கங்களின் பேரமைப்பு"

    • கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விற்பனையாளர்கள், உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோவில்பட்டி:

    தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின்படி எடை அளவுக்கான முத்திரை கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்ததை கண்டித்தும், நகைக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளுக்கான முத்திரைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்தும் கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் லாலா ஸ்வீட்ஸ் விற்பனையாளர்கள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், செல்போன் விற்பனையாளர்கள், மருந்து வணிகர்கள், பூச்சி மருந்து மற்றும் உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும்.
    • வேளாண் இடுபொருட்கள் விதைகள், உபகரணங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை விவசாயிகள் நலன்கருதி ரத்துசெய்யப்பட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உள்ளாச்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான முன்தேதியிட்ட வாடகை விதிப்பு அறிவிப்பை திரும்ப பெற்றுக்க் கொள்ளுமாறும், 2007-ம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி சந்தை, மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகை நிர்ணயித்திடவும் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒற்றை சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்திடும் முறையை அரசு அறிவித்திட வேண்டும்.

    விதிமீறல் கட்டிடங்களுக்கு கட்டிட வரைமுறை கால நீட்டிப்பு நகரமைப்பு சட்டங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட பகுதிகளை கால இடைவெளி உடன் இனம் காண தமிழகம் முழுவதும் சட்ட திருத்தம் வேண்டும்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியமும், காப்பீடும், குடும்ப நல நிதியும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் காலங்களில் வணிகர்களுக்கும், வணிக குடும்பங்களுக்கும் அரசே காப்பீடு செலுத்தும் முறையை நடை முறைப்படுத்த வேண்டும். இழப்பீடுகள், வழங்கிடவும் வேண்டும்.

    ஜி.எஸ்டி. வரிமுறையில் செய்யப்பட்டு வரும் தினசரி மாறுதல் மற்றும் திருத்தங்கள் காரணமாக தொழில் வணிகத்துறை மிகுந்த குழப்பத்தில் பல்வேறு இனங்களை சந்தித்து வருகிறது. எளிய வரி என்கிற இலக்கை எட்ட மத்திய அரசு ஜி.எஸ்டி வரியை மறு சீராய்வு செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற பிரதமரின் கொள்கையை உறுதிப்படுத்தி சரியான வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சிறுகுறு வணிகர்களும் எளிதாக கையாளும் விதமாகவும், வணிகர்களுக்கு எதிரான ஜி.எஸ்டி. வரி குளறுப்படியை மற்றும் முரண்பாடுகளை கலைத்திட வேண்டும். இதற்காக வணிகப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு உயர்மட்ட குழுவை அமைத்திடவும் பழைய பொருட்களுக்கான ஜி.எஸ்டி. வரி ஒரே நிலையில் அதாவது 5 சதவீதம் மட்டுமே அமல்படுத்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது.

    நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவித்திடவும், சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும், அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரிய மாற்றங்களை செய்திடவும் வலியுறுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகிட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உற்பத்தி சார் தொழில்களை ஊக்குவிக்கவும், பெருநகரங்கள் நோக்கி பொதுமக்கள் புலம் பெயர்வதை தடுத்திடவும், தொழில் பூங்காக்கள் குறிப்பாக தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநா தபுரம் மாவட்டங்களில் அமைத்திட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    மேலும் மத்திய மாநில அரசுகளே அனுமதி வழங்கி அதற்கு முரண்பட்ட காரணங்களை சொல்லி முடக்கி வைக்கின்ற தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக கட்டமைப்பை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும்.

    ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும். ஈரோடு பெருநகரின் சுற்றுச்சூழலை பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாய கழிவுகள் சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை தவிர்த்திடும் வகையில் வெளிப்புற சுற்றுவட்ட பாதை காவிரி கரையை ஒட்டி நெடுஞ்சாலை அமைத்து இதர மாவட்ட ங்களோடு போக்குவரத்தை இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர் நல வாரியம் நலவாரிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் நியமனத்தோடு முழுமைபெற்ற வாரியமாக வணிகர் நலன்காத்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

    ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ பணிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு, மீண்டும் கடைகளை திருப்பி அளித்து, முழுமைபெறாத ஸ்மார்ட்சிட்டி பணிகளை விரைந்து முடித்து வணிகர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    தமிழகத்தில் டிஜிட்டல் தொழிலில் ஈடுபடும் சுமார் 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டி, குறிப்பிட்ட இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கி வரைமுறை படுத்திடவும், அதற்கான உரிமங்களை பெற எளிய முறையை வகுத்திடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

    பொட்டலப் பொருட்கள் மற்றும் எடையளவு உரிமம் பெற தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை என இருவேறு துறைகளின் இரட்டை உரிம முறையை பெறவேண்டும் என்ற நிலை சட்ட முரண்பாடுடையது. நீக்கி ஒரே துறையின் கீழ் அதாவது உணவுப்பாதுகாப்பு துறையின் கீழ் மட்டுமே உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைத்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

    காலம் கடந்த எடையளவு முத்திரை, தராசு முத்திரை பதித்தலுக்கும் அபராதத் தொகை ரூபாய் முறையே 50, 150 என்று இருப்பதை ரூ.5000 அபராதம் என மாற்றி அறிவித்திருப்பதை திரும்பப் பெற பேரமைப்பு வலியுறுத்துகின்றது. தொழிலாளர் நலத்துறை லேபிள், மிஸ்பிராண்ட், பேட்ஜ் நெம்பர், பிரிண்டிங் குறைபாடுகளுக்கு வணிகர்கள் மீது தண்டனை மற்றும் அபராதச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு உணவுப்பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டப் பிரிவுகளின் கீழ் கொண்டுவர வேண்டும்.

    வேளாண் இடுபொருட்கள் விதைகள், உபகரணங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை விவசாயிகள் நலன்கருதி ரத்துசெய்யப்பட வேண்டும்.

    வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவும், வளர்ந்து வரும் தனிநபர் வருமானத்தை கருத்தில் கொண்டும், மத்திய அரசு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்-10 லட்சம் என உயர்த்தி அறிவித்திட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    இளைய தலைமுறை வணிகத்தை ஊக்குவித்து, புதிய வேலை வாய்ப்பு மற்றும் வணிக வழிகாட்டு மேலாண்மை அமைப்பின் மூலம் மாவட்ட வாரியாக ஆலோசனை மையங்கள் அமைத்து வணிகத்தை மேம்படுத்த பேரமைப்பு நிதி ஏற்படுத்துவதற்கான சூழல்களை ஆராய்ந்து, மாநில அளவில் மேற்கொள்ள பேரமைப்பு இம்மாநாடு மூலம் தீர்மானிக்கிறது.

    மத்திய அரசு டீசல்-பெட்ரோல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவந்து, விலையேற்றத்தை தவிர்த்திட வேண்டும். கியாஸ் சிலிண்டர்கள் அவ்வப்போது விலையேற்றம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு முழுமையாக தவிர்த்திட இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

    மத்திய அரசின் அறிவிப்பின்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே என்ற அடிப்படையில் நீக்கப்பட வேண்டிய சுங்கச் சாவடிகளை விரைந்து நீக்கிடவும், ஆண்டு தோறும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பதை மறு ஆய்வு செய்திடவும், காலாவதி அடைந்த சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு நீக்கிடவும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்கள், பெண்கள் நடமாடும் மார்க்கெட் பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இடங்களில் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை, பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசு உடனடியாக அகற்றிட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    தமிழக அரசு பிளாஸ்டிக் தடைக்கான உயர்நீதிமன்ற வழக்கில், அரசாணை எண்.37-ன்படி, மறுசுழற்சி இல்லா பிளாஸ்டிக்கை தடை செய்ததை, திரும்பப் பெறுவதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது ஒருதலைப் பட்சமானது என்பதனால், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தடை அரசாணை எண்.84-யும் இயற்கை நீதியின்படி திரும்பப்பெற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    எம்.எஸ்.எம்.இ பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகையினை வணிக நிறுவனங்களுக்கும் அமல்படுத்திடவும், உச்ச நேர மின் பயன்பாட்டுக் கட்டணம் என்பதை முழுமையாக தவிர்த்து ஒரே சீரான சாதாரண மின் கட்டணத்தை முழுநேர பயன்பாட்டுக் கட்டணமாக அறிவித்திடவும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    மேலும் புதிய மின் இணைப்புக்கு கட்டிட முழுமைச்சான்று 8,400 சதுரஅடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தேவை இல்லை என்று அறிவித்திருப்பதை, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தேவையில்லை என்று மாற்றி அறிவித்து புதிய மின் கட்டண இணைப்புக்கு முறைகேடுகளை தவிர்த்திட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    விருத்தாச்சலம், துறையூர், ஆரணி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவித்து விருத்தாச்சலம், துறையூர் ஆரணி மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி வளர்ச்சிக்கு வழிவகுத்திடுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது.
    • பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அந்த கூட்டத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இணைப்பு சங்கமாக மாற்றுவது.

    மே 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், வியாபாரிகளும் கடைகளை அடைத்து, அந்த மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.பெருகி வரும் சாலையோர வியாபாரிகளால் அனைத்து கடை வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் சாலையோர கடைகள் அமைப்பதை தவிர்த்து அதற்கென ஒரு இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.

    புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது. திருப்பூர் மாநகரில் சாலைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்படுவதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கிறது. எனவே சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×