search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநிலத்தினர்"

    • கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    திருப்பூர் :

    கடந்த மார்ச் 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தினர் பலர் பண்டிகை கொண் டாட்டங்களுக்கு சொந்த மாநிலம் பயணித்தனர். கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.பண்டிகை முடிந்து 2வாரங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் திருப்பூருக்கு பலரும் வர தொடங்கியுள்ளனர். சென்றவர்கள் மட்டுமின்றி திருப்பூருக்கு பலரை புதிதாக அழைத்தும் வருகின்றனர். உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.

    வாரநாட்களை விட வார இறுதி விடுமுறை நாட்களில் திருப்பூரை கடந்து செல்லும் ரப்திசாகர், அரோனி, ஹிம்சாகர், ஸ்வர்ண ஜெயந்தி, எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட், பிலாஸ்பூர், பரூனி, கோர்பா சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பூரில் அதிகமாக பீகார் மாநிலத்தவர் பணிபுரிகின்றனர்.அம்மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொது பெட்டிகள் நிரம்பி வழியும் அளவு வடமாநிலத்தினர் வந்திறங்குகின்றனர்.இதனால் கடந்த இரு தினங்களாக திருப்பூர் ரெயில் நிலைய பிளாட்பார்ம் வடமாநிலத்தினரால் நிரம்பி வழிகிறது.திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி வடமாநிலத்தினர் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., சஷாங் சாய், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின் அமைச்சர் மு.சாமிநாதன் பேசியதாவது:-

    வடமாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு குறித்து முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். அவர்களின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்தனர். வடமாநிலத்தினர் சொந்த ஊருக்கு, பண்டிகையை முன்னிட்டு சென்றுள்ளனர். தவிர பயந்தோ, அச்சுறுத்தலுக்குட்பட்டோ செல்லவில்லை. வதந்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புகார்கள் ஏதும் வந்தால், உடனடி நடவடிக்கை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

    ×