என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடமதுரை விபத்து"
வடமதுரை:
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் அய்யலூர் அடுத்துள்ள கல்பட்டி பகுதியில் இன்று காலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சை ஓட்டி வந்த தேனியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 28), பயணி வேடசந்தூரைச் சேர்ந்த காளிமுத்து (50) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பெரியகுளத்தில் இருந்து வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி ஒரு சரக்கு வேன் சென்று கொண்டு இருந்தது. வேனை குள்ளப்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.
வடமதுரை வண்டி கருப்பணசாமி கோவில் அருகே வேன் வந்த போது திடீரென சாலையின் நடுவே தலை குப்புற கவிழந்தது. இதில் வேனில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான வாழைத்தார்கள் சாலை முழுவதும் சிதறி சேதமானது.
படுகாயமடைந்த தர்மராஜ் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு விபத்துகள் குறித்தும் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்