search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை அருகே தலை குப்புற கவிழ்ந்த ஆம்னி பஸ்-சரக்கு வேன்
    X

    வடமதுரை அருகே தலை குப்புற கவிழ்ந்த ஆம்னி பஸ்-சரக்கு வேன்

    வடமதுரை அருகே ஆம்னி பஸ் தலை குப்புற கவிழ்ந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வடமதுரை:

    சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் அய்யலூர் அடுத்துள்ள கல்பட்டி பகுதியில் இன்று காலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சை ஓட்டி வந்த தேனியைச் சேர்ந்த ஸ்டாலின் (வயது 28), பயணி வேடசந்தூரைச் சேர்ந்த காளிமுத்து (50) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    பெரியகுளத்தில் இருந்து வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி ஒரு சரக்கு வேன் சென்று கொண்டு இருந்தது. வேனை குள்ளப்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

    வடமதுரை வண்டி கருப்பணசாமி கோவில் அருகே வேன் வந்த போது திடீரென சாலையின் நடுவே தலை குப்புற கவிழந்தது. இதில் வேனில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான வாழைத்தார்கள் சாலை முழுவதும் சிதறி சேதமானது.

    படுகாயமடைந்த தர்மராஜ் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு விபத்துகள் குறித்தும் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×