search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரியில் கடத்தல்"

    • போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
    • இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் இன்று காலை ராமநாதன்குப்பம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரியில் சென்று பார்த்த போது 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது பெரிய வந்தது. மேலும் இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? லாரியில் பதிவு எண் மற்றும் முக்கிய எண்களை அழிக்கப்பட்டதால் திருட்டு லாரி? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    ×